Posts

Showing posts from November, 2022

கண்ணீர்விட்டு கதறி அழுத பக்தர்கள் - யானை லட்சுமிக்காக

Image
          பு துச்சேரியில் உயிரிழந்த அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர். எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் போல் இருந்த இந்த யானை லட்சுமி இறந்தது மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், யானை இல்லாத இந்த கோவிலை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யாணை புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.  பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யாணை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென  யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை ...

உயிரழந்தது பிரசித்திபெற்ற மணக்குளவிநாயகர் கோவில் யானை லட்சுமி

Image
  பு துச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென கீழே விழுந்து பறிதாபமாக உயிரிழந்தது புதுச்சேரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யானை புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.  பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யானை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென  யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யாணைக்கு அஞ்சலி செலுத்து கோவிலுக்கு எடுத்துச்செல்லும் முயற...

இந்த மருந்துகளுக்கு புதுச்சேரியில் தடை விதிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Image
        பு துச்சேரியில் H மற்றும் H1 வகை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் விற்பனை செய்ய தடை விதிப்பு. மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு.       புதுச்சேரி அரசும், புதுச்சேரி மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மருந்து வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முழுமையாக தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பதாகைகளை ஒவ்வொரு மருந்துக் கடைகளிலும் பொருத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  மாவட்ட ஆட்சியர் வல்லவன் விழிப்புணர் பதாகைகளை வெளியிட்டார். மேலும் அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மருந்து வகைகளை மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டுக்கள் இல்லாமல் விற்க இயலாது என்ற வாசகங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த விழிப்புணர்வு பதாகைகளை மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அனைத்து மருந்தகங்களிலும் வழங்கி வெளியில் பொருத்தும் படி  அறிவுறுத்தினார்கள். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன், ப...

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய மாணவன் கைது

Image
    பு துச்சேரியில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி  திருவண்டார் கோயில் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து பள்ளி துணை முதல்வர் சாந்தா தேவி திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எஸ் ஐ  ராஜசேகர் புகாரை பெற்றுக் கொண்டு திருடிச் சென்ற மர்ம  நபர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் நேற்று திருவண்டார் கோயில் கடைவீதியில் சாக்குப் பையில் மூட்டை கட்டிக்கொண்டு தலையில் தூக்கி சென்றவாறு ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அழைத்து சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் திருவண்டார்கோயில் சின்ன பேட் பகுதியை சேர்ந்தவர் என்பதும், தனியார் தொழில்நு...

நிறுத்தப்பட்ட இலவச பேருந்தை இயக்க கோரி மாணவர்கள் போராட்டம்

Image
    பு துச்சேரியில் நிறுத்தப்பட்ட இலவச பேருந்து இயக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் தினசரி தனியார் பேருந்து கட்டணமாக 50 ரூபாய் செலவு செய்யும் சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட இலவச சிறப்பு மாணவர் பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தியும்,  புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி, காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் பின்னர், தொழில்நுட்ப கல்வி இயக்குனராக தனி அதிகாரி சௌமியாவிடம் புகார் மனுவை அளித்தனர். அப்போது இன்னும் 20 நாட்களில் இலவச பேருந்து ச...

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு SRM-ன் தமிழ்ப்பேராய விருது

Image
       பு துச்சேரியில் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் தமிழ், திருக்குறள் மாநாடு நடத்தி திருக்குறளை லத்தீன், பிரெஞ்சு மொழியில் மெழிபெயர்ப்பு செய்து தமிழறிஞர்களை கவுரவித்த புதுவைத் தமிழ்ச்சங்கத்திற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தமிழ் பேராயம் ஆண்டு தோறும், சிறந்த தமிழ் நுால், தமிழ் இதழ், தமிழ்ச் சங்கம், சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில், 12 தலைப்புகளில் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் தமிழ்ப்பேராய விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி புதுவை தமிழ்ச்சங்கத்திற்கு தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வெங்கட்டா நகரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக புதுவைத் தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்ச்சங்கம் தொடங்கியது முதல் தற்போழுது வரை தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் மாநாடு மற்றும் திருக்குறள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ் தொடர்பான கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள், தமிழகம் முழுவதும் உள்ள தமிழிறிஞர்களை பார...

ஜிப்மர் மருத்துவமனை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுகவினர் முதலமைச்சரிடம் மனு

Image
     பு துச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வயுறுத்த வேண்டுமர என்றும், அதுவரை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் முத்மைச்சர் ரங்கசாமியை சந்தித்து கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில், நம் மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேலை வாய்ப்பில் மருத்துவர், செவிலியர், டெக்னீஷியன், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் பணி நியமனம் செய்யும் போது புதுச்சேரி மாநிலத்திற்கான தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் நம் மாநிலத்தை சேர்ந்த தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 243 எம்பிபிஎஸ் இடங்களில் 64 இடங்கள் அதாவது, 26.5 சதவீத இடங்கள் புதுச்சேரி மாநிலத்தின் இட ஒதுக்கீடாக வழ...